பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப...
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 186 விமானத்தின் மூலம் பூதவுடல் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த விமானம் இன்று மாலை 5 மணிக்கு நாட்டை வந்தடையும் என ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் பூதவுடல், பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.