நீண்ட காலமாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அச்சுவேலி பகுதி மக்களினால் யாழ்ப்பாண மாவட்ட பொலீஸ் உயரதிகாரிகள் ...
நீண்ட காலமாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அச்சுவேலி பகுதி மக்களினால் யாழ்ப்பாண மாவட்ட பொலீஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதை யடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்
விஜயத்தின் போது அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயர் மட்டங்களிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.