45 பேர் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் தனி ஒருவர் மட்டும் முடிவுகளை எடுத்துவிட்டு உடனே வா என அறிவிப்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஈ.பீ.ட...
45 பேர் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் தனி ஒருவர் மட்டும் முடிவுகளை எடுத்துவிட்டு உடனே வா என அறிவிப்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஈ.பீ.டீ.பியின் உறுப்பினர் இரா.செல்வ்வடிவேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் இருக்கின்றோம். இந்த 45 பேரும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆனால் இங்கே இடம்பெறும் நிகழ்வுகள், விடயங்கள் தொடர்பில் கலந்து பேசி முடிவு எடுப்பது கிடையாது. முடிவை எடுத்த பின்பே அறிவிக்கப்படுகின்றது.
இதில் ஆரியகுளம திறப்பு தொடர்பில் உறுப்பினர்களிற்கே இன்றுதான் தெரியும். நிதியை விழங்கியவரிற்கு பிறந்தநாள் என்பதறகாக உடன் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. இதேபோல் நாவலர் சிலை திறப்புத் தொடர்பிலும் ஏதும் எமக்கு தெரியாது. அதேநேரம் அந்த சிலையின் வடிவம் தொடர்பிலும் மாறுபட்ண கருத்தே உள்ளது.
இவ்வாறுதான் செங்கோலை கையேற்பது தொடர்பிலும் அன்று காலைதான் அறிவிக்கப்படுகின்றது. இங்கே என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. முடிவை எடுத்துப்போட்டு ஏன் அறிவிப்பான் இதனால் இவ்வாறான செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.