யாழ்.கொக்குவில் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த ரவு...
யாழ்.கொக்குவில் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த ரவுடி பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடை்ய கொலின் என்ற ரவுடியே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.