வடக்கு மாகாணத்தின் உள்ள கூட்டுறவு சங்கங்களை இணைத்து 15 மினிக் கோப் சிற்றிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் ...
வடக்கு மாகாணத்தின் உள்ள கூட்டுறவு சங்கங்களை இணைத்து 15 மினிக் கோப் சிற்றிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு பதிவாளருமான மு. நந்த கோபாலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கூட்டுறவுத் துறையை வினைதிறனாக்குவதற்கும் வியாபார கூடங்களை விருத்தியடையச் செய்வதற்கும் கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் ஊடாக தலா 5 லட்சம் ரூபா வீதம் வழங் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயங்கி வருகின்ற கூட்டுறவு சங்கங்களின் கோப் சிற்றிகளுடன் இணைந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரிக் கோப் சிற்றிகளை அமைக்க தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத் துறை மேலும் வளர்ச்சி அடையச் செய்வதற்கு எதிர்காலத்தில் பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.