முல்லைத்தீவு-விசுவமடு-பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஒரே குடும்பத்தி...
முல்லைத்தீவு-விசுவமடு-பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த சம்பவத்திற்கான காரணமாகும்.
சம்பவத்தின் போது ஒருவர் இடியன் எனப்படும் உள்நாட்டு துப்பாக்கியை எடுத்து இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.