யாழ்ப்பாணம் – கொடிகாமம் களப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் களப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பிச் செல்ல முயன்ற சமயம் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மீது 6 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டபோதும், ஏனையோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு கைப்பற்றபட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியும் இராணுவத்தினரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.