தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 நாளை(22) சனிக்கிழமை நடைபெறும். கொவிட் தொற்று மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
கொவிட்-19 தொற்றுள்ள மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்கும் மாணவர்களுக்காக சுமார் 108 பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பரீட்சைக்கு அமரக்கூடிய வகையில் தரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 2,943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதன்படி, 255,062 மாணவர்கள் சிங்கள மொழி ரீதியாக பரீட்சைக்கு முகம்கொடுக்கவுள்ளனர், மேலும் 85,446 மாணவர்கள் தமிழ் மொழி ரீதியாக பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.