கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் புதையல் தோண்ட முற்பற்பட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழுவை பொலிசார் மடக்கிப் பிடித்தனர். புத்த...
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் புதையல் தோண்ட முற்பற்பட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழுவை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
புத்தளத்தைச் சேர்ந்த 8பேர் கொண்ட குழுவினர் வட்டக்கச்சி பண்ணைக்கு அருகில் முன்பு விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதி எனக் கருதப்பட்ட காணியில் சந்தேகத்திற்கு இடமான சிலர் நடமாடுவதாக கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடமாடுபவர்கள் வாகனத்தில் பல இயந்திர சாதனங்களுடன் காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போதே மேற்படி 8பேரும் கைது செய்யப்பட்டதோடு இந்த 8 பேரில் பொலிசாரும் அடங்கியிருப்பதோடு சிங்களம், தமிழ், முஸ்லீம் என மூவினத்தவர்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.