வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வயிற்றுக்குள் கோஸ்ட் துணி பழுதடைந்து கிருமித் தொற்று ஏற்பட்டு ம...
வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வயிற்றுக்குள் கோஸ்ட் துணி பழுதடைந்து கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாக்கருவீதி, கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த மனோன்மணி குல வீரசிங்கம் (வயது- 60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த திங்கட்கிழமை (10) வாந்தி எடுத்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(11) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அன்றிரவு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்றுப் பரிசோதனையில் அவரின் வயிற்றுக்குள் கோஸ்ட் துணி பழுதடைந்து கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் சட்ட வைத்திய அதிகாரி வாமதேவன் தெரிவித்தார்.
அப் பெண் கடந்த வருடம் டிசம்பர் 10 ஆம் திகதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சத்திரசிகிச்சையின் போதே கோஸ்ட் துணி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.