யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்ப...
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற போதே யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.