யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு இராணுவம் என்றும் துணை நிற்கும் என யாழ் 51வது படைக் கட்டளை...
யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு இராணுவம் என்றும் துணை நிற்கும் என யாழ் 51வது படைக் கட்டளைத் தளபதி சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 53வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 250 பேருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் தேவைகளை அறிந்து இராணுவம் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் அன்சல் லங்கா நிறுவனத்தின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு காலணி மற்றும் கொவிடா சுகாதார கையுறைகளை வழங்கியுள்ளோம்.
இலங்கையின் இராணுத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி செனரத் யாப்பா அவர்களில் வழிநடத்தலின் கீழ் குறித்த செயற்திட்டம் இடம்பெற்று வருகிறது.
ஆகவே நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்களை உருவாக்குவதற்கு தேவையான உதவிகளை இராணுவம் வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.