தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை களவாஓடைப் பகுதியில் சுமார் 80 லிட்டர் கசிப்பு மற்றும் சுமார் இருபது ஒரு இலட்சம் ரூபா பணம் தெல்லிப...
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை களவாஓடைப் பகுதியில் சுமார் 80 லிட்டர் கசிப்பு மற்றும் சுமார் இருபது ஒரு இலட்சம் ரூபா பணம் தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக தெல்லிப்பளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கசிப்பு (ஸ்பிறிற்) உபகரண தொகுதி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை கைது செய்த பொலிசார் குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சுமார் 25 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.