நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி மீண்டும் இன்று செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.
இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார விநியோக தடைக்கு அனுமதி வழங்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் தெரிவித்திருந்த பின்னணியிலேயே, இன்று இந்த மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.