ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள எல்லைச் சாவடிக்கு உக்ரைனில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த எல்லைச் சாவடி முற்றிலு...
ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள எல்லைச் சாவடிக்கு உக்ரைனில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறித்த எல்லைச் சாவடி முற்றிலுமாக அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSBஐ மேற்கோள் காட்டி Interfax செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்த சம்பவம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் நடந்ததாக Interfax தெரிவித்துள்ளது.