வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களை கொளரவிக்கும் நிகழ்வின் முன்னேற்பாடாக இன்று (15) புதன்கிழமை மதியம் ...
வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களை கொளரவிக்கும் நிகழ்வின் முன்னேற்பாடாக இன்று (15) புதன்கிழமை மதியம் ஊடக அமையத்தில் இணையவழிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வெண்மேரி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் அனுரா அருளப்பு அவர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பு இணையவழி மூலம் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்தாபகர் யாழில் முதன்முறையாக மறைந்த பல்வேறு துறை சார்ந்தவர்களின் நினைவாக கௌரவிக்கும் விழா இடம்பெறவுள்ளது.
கவி இமையம் கிறிஸ்தோ மரியாம்பிள்ளை விருது, நனிக்கவி கிறிஸ்தோ சூசைப்பிள்ளை விருது, இளம் கலைப் புலவர் மரிசால் சிந்தாத்திரை விருது, சுவாமி ஞானப்பிரகாசர் விருது, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விருது, தமிழ் காவலர் சி வை தாமோதரம்பிள்ளை விருது, கவிஞன் நீலவானன் விருது, கவிஞர் ராஜ பாரதி விருது, கவிஞர் மஹாகவி விருது, சிரித்திரன் சுந்தர் விருது, சுவாமி விபுலானந்தர் விருது, நாடகக் காவலர் கலையரசு சொர்ணலிங்கம் விருது,
நடிகமணி விவி வைரமுத்து விருது, நாட்டுக்கூத்து மாமணி பூந்தான் ஜோசப் விருது, தமிழ்தென்றல் தனிநாயகம் அடிகளார் விருது கலாநிதி கா சிவத்தம்பி ஞாபகார்த்த விருது, பெருங்கவிக்கோ ஆ.மு
சரிபுதீன் விருது, நாவலாசிரியர் இளங்கீரன் விருது,
தலித் இலக்கியப் பிதாமகர் கே.டானியல் விருது, இலங்கையர்கோன் ஞாபகார்த்த விருது, இசைப் புலவர் சண்முகரத்தினம் விருது, அறப்பணி பண்டிதை அப்பாக்குட்டி தங்கம்மா விருது, பேராசிரியர் துரைராஜா ஞாபகார்த்த விருது, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை விருது, கலைக்குக் குரிசில் நீல.அந்தோனி விருது,
நீச்சல் வீரர் மு. நவரத்தினசாமி விருது, உலக சாதனையாளர் ஆனந்தன் விருது, நவாலியூர் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் விருது, கலைப்புலவர் நவரத்தினம் விருது, கலாயோகி ஆனந்த குமாரசுவாமி விருது, கவிஞர் முருகையன் ஞாபகார்த்த விருது, உட்பட மேலும் பல விருதுகள் வழங்கப்பட உள்ளது.
வருடந்தோறும் குறித்த நிகழ்வை நடத்துவதற்காக எமது நிறுவனம் தயாராக இருப்பதோடு அது தொடர்பாக விரைவில் அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.