பெப்ரவரி 2 உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் க...
பெப்ரவரி 2 உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.திலீபன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட்டும் சிறப்பு விருந்தினராக உதவி கல்விப்பணிப்பாளர் க.சுப்ரமணியம் அவர்களும், சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன்,கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்