750 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாமையினால் இன்று(30) 10 மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் துண்ட...
750 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாமையினால் இன்று(30) 10 மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இன்று(30) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
⭕ A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் பிற்பகல் 2 மணி தொடக்கம் நள்ளிரவு 12 வரையான காலப்பகுதியில் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
⭕ G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் 6 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
⭕ M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
⭕ P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் பிற்பகல் 02 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
⭕ T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.