24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் ஆலோச...
24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்காக தொடர்ச்சியாக இயங்கக்கூடிய விசேட செயற்பாட்டு மையத்தை நிறுவுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.