சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான 29வது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி (50 ...
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான 29வது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான ஒரு நாள்
கிரிக்கெட் போட்டி (50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்)
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 18 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.)
இவ்வருடம் நடைபெற்ற பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ் வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு A.F. டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு N. விஷ்னுகாந்தும் தலைமை தாங்குகின்றனர். இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.