இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான வைய்ரா ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு தெற்கே இலங்கை மீன்பிடி படகில் பயணித்த 5 இலங்கை மீனவர்களை கைது ...
இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான வைய்ரா ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு தெற்கே இலங்கை மீன்பிடி படகில் பயணித்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இந்திய கரையோர காவல் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதன்போது இலங்கை மீனவர்கள் பயணித்த படகை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி மீனவர்கள் மற்றும் படகுடன் நாளை அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடலோர பாதுகாப்பு குழும மராயன் போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.