கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல...
கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தகவல் தொடர்புகளை சீர்குலைக்க ரஷ்யா முதலில் திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு, யுக்ரேனிய ராணுவம்-அரசியல் தலைமை சரணடைவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் போலிச் செய்திகள் பெருமளவில் விநியோகிக்கப்படும்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
"போலிச் செய்தியை நிரூபிக்க, அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களின் புகைப்படங்களையும், போலி வீடியோவையும் வெளியிடுவார்கள். அவை பொய்" என்று ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்.