யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலி...
யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம் இன்று யாழ் மாவட்டத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சரியான முறையில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புக்களும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.