சாவகச்சேரி பிரதேச சபைக்கு அருகில் உள்ள காணியின் வேலியை அனுமதியின்றி அகற்றி சாவகச்சேரி பிரதேச சபை அடாத்தாக மதில் கட்டுவதாக காணி உரிமையாளரான ச...
சாவகச்சேரி பிரதேச சபைக்கு அருகில் உள்ள காணியின் வேலியை அனுமதியின்றி அகற்றி சாவகச்சேரி பிரதேச சபை அடாத்தாக மதில் கட்டுவதாக காணி உரிமையாளரான சின்னையா அருளம்பலம் கவலை தெரிவித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பிரதேச சபைக்கு மேற்கு எல்லையில் தனது காணியுள்ளதாக இக் காணியின் கிழக்கு எல்லையில் உள்ள வேலி அகற்றப்பட்டே பிரதேச சபையால் மதில் கட்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி அரைவாசி மதில் கட்டப்பட்ட நிலையில் காணி உரிமையாளரால் மதில் கட்டுவதை நிறுத்தத் தெரிவித்து பிரதேச சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்து மட்டுமல்லாது பிரதி உள்ளூராட்சி திணைக்களத்துக்கும் அனுப்பியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய இருக்கும் பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை பொறுப்பில்லாமல் நடப்பது தொடர்பில் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பாமத் அவனை தொடர்பு கொண்டு கேட்டபோது தமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டே மதில் அமைப்பதாகவும் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு தெரிவித்த வரை அழைத்துப் பேசுவதாகத் தெரிவித்தார்.