ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெ...
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என யுக்ரேன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
“சமீபத்திய பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருதரப்பும் மிக விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
”இந்த படையெடுப்பால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி குறித்து நாங்கள் விரிவாக பேசிசோம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்” என்று அவர் தெரிவித்தார்.