இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக தன்னை தமிழர் தலைவராக முன்னிறுத்தும் கிறிஸ்தவ மத போதக...
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக தன்னை தமிழர் தலைவராக முன்னிறுத்தும் கிறிஸ்தவ மத போதகர் சுமந்திரனின் நிகழ்ச்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது என இந்த மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.செந்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை இலங்கையில் இருந்து வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இது கிறிஸ்தவ மிஷனரிகளின் சதித் திட்டமாகும். இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் சைவர்கள் ஆவார்கள்.
20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் எப்படி இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். கிருத்தவர்கள் தங்கள் அரசியல் ஆதிக்கம் மூலம் மதமாற்ற நடவடிக்கைகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
சுமந்திரன் மற்றும் அவரது மனைவி சாவித்திரி சுமந்திரன் ஆகியோர் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கிறிஸ்தவராக மதம் மாற்றி அவர்கள் சார்ந்த நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்கள்.
சுமந்திரன் அவர்கள் அரசியல் உள்நோக்கத்தோடு மதமாற்றும் உள்நோக்கத்தோடு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.