யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் வீதிகளில் யாசக நடவடிக்கையில் ஈடுபடாமல் தம்மை நம்பி வாழ்க்கையை வாழ்ந்து வருவது போற்றத்தக்க விடையம் ...
யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் வீதிகளில் யாசக நடவடிக்கையில் ஈடுபடாமல் தம்மை நம்பி வாழ்க்கையை வாழ்ந்து வருவது போற்றத்தக்க விடையம் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பலர் உடல் அவயவங்கள் சிறப்பாக இயங்கும் நிலையிலும் பிறரிடம் யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் மாற்றுத்திறனாளிகள் நான் அறிந்த வகையில் யாசக நடவடிக்கையில் ஈடுபடாமல் தமது வலிமைக்கு ஏற்ற வகையில் தமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருவது போற்றத்தக்க விடையம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் வாய்ப்புகளை முதலீடு இன்றி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் என்ற வகையில் நாம் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறோம்.
அவ்வாறான ஒரு செயற்பாடு தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அழைப்பு அவர்களுக்கு வழங்கப்படும் .
மேலும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் செனரத் யாப்பா குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உதவி பொருட்கள் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆகவே யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் தொடர்பில் பிரதேச ரீதியாகவும் மாவட்ட நீதியாகவும் அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா பிரதம விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.