கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை மற்றும் இந்திய நாடுகளிலிருந்து தலா 100 பேர் வரை கலந்து கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக யாழ்...
கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை மற்றும் இந்திய நாடுகளிலிருந்து தலா 100 பேர் வரை கலந்து கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் 11,12திகதிகளில் இடம்பெறவுள்ள கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு இரு நாடுகளிலும் இருந்து தலா 50 பேர் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன் நிலையில் நேற்று வியாழக்கிழமை கச்சதீவு உற்சவத்தில் இரு நாட்டில் இருந்தும் நூறு பேர் வரை கலந்து கொள்ளலாம் என உத்தியோக பூர்வமாக அறிவுறுத்தல் கடிதம் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.