நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு பயணமானார்.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் உடன் இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.