உங்களைப் பற்றிய அறிமுகம் நான் டெனிஸ்ற்ரா அருமைலிங்கம். யுனாளையலயய டீசனையட ளுவரனழை அழகுக்கலை நிலையத்தை நடாத்தி வருகின்றேன். யாழ்ப்பாணத்தில்...
உங்களைப் பற்றிய அறிமுகம்
நான் டெனிஸ்ற்ரா அருமைலிங்கம். யுனாளையலயய
டீசனையட ளுவரனழை அழகுக்கலை நிலையத்தை நடாத்தி
வருகின்றேன். யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது
திருகோணமலையில் வசித்து வருகின்றேன். 2006
ஆம் ஆண்டு அழகுக்கலைத்துறையை ஒரு தொழிலாக
முன்னெடுத்து செய்தேன். 16 வருடங்களைக்
கடந்து தற்போது 17 வது வருடத்தில் அடியெடுத்து
வைக்கின்றேன். என்னுடைய அழகுக்கலை
நிலையத்தில் மிகமுக்கியமாக செய்யப்படுவது
மணப்பெண் அலங்கார ஒப்பணைகள். ஏனைய
அழகுக்கலைகளை மேற்கொண்டாலும் மணப்பெண்
அலங்கார ஒப்பணைகளையே நான் முதன்மையாக
முன்னெடுத்து செய்கின்றேன்.
Adhisayaa Bridal Studio அழகுக்கலை நிறுவனத்தின் | உரிமையாளர் டெனிஸ்ற்ரா அருமைலிங்கம் |
அழகுக்கலைத் துறையில் எப்படி ஆர்வம்
வந்தது?
பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் நடனத்தை
ஒரு பாடமாக தெரிவு செய்து கற்றுவந்தேன்.
நடனகலைஞர்கள் நடனமாடுவதற்கு முன்னர்
அழகாக ஒப்பணை செய்து கொள்ள வேண்டும்.
முகபாவங்களோடு நடனமாடும் போது பாவங்களை
மேலும் மெருகூட்டி காட்டுவது ஒப்பணைகள் தான்.
ஆகையால் பாடசாலை காலத்திலேயே ஒப்பணை
செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடனத்தை
பயில ஆரம்பிக்கும் போது தான் அழகுக்கலையில்
எனக்கு ஆர்வம் பிறந்தது. இந்த ஆர்வத்தினால்
அழகுக்கலையை முறையாக கற்கவேண்டுமென்ற
எண்ணம் தோன்றியது. அதன் பிறகு எனது
உயர்தரத்தை பூர்த்தி செய்துவிட்டு முறையாக
அழகுக்கலை கற்கைநெறியை கற்றுக்கொண்டேன்.
எந்த தொழிலை நமக்கு மிகவும் பிடிக்கிறதோ அந்த
தொழிலை நாம் செய்யும்போது ஆர்வம் அதிகரிக்கும்.
எனக்கும் அதுபோல தான். அழகுக்கலை நான்
நேசிக்கும் ஒரே துறையாகும். இதனை நேசிக்க
ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அதன்
மேல் கொண்ட ஆர்வமும் ஈடுபாடும் சற்றும்
இத்துறையில் நீங்கள் எதிர்
நோக்கும் சவால்கள் என்ன?
அழகுக்கலையில் இருக்கும் சவால்
என்றால் வாடிக்கையாளரின் திருப்திதான்.
ஒவ்வொரு பெண்களுக்குள்ளிருக்கும்
ரசணைகள் வேறுபடும். அவர்களின்
முகத்தோற்றங்களும், தேவைகளும்
வேறுபடும். ஆகவே என்னிடம் வரும்
வாடிக்கையாளர்களுக்கு முதலில் என்ன
தேவையென்று நான் அறிந்துகொண்டே
அவர்களுக்கு ஏற்றவாறு ஒப்பணை
செய்ய வேண்டியிருக்கிறது. புதிய
வழிமுறைகளை கையாண்டு, புதிய
நுணுக்கங்களை பிரயோகித்து வாடிக்
கையாளரை திருப்திபடுத்த வேண்டும்.
வாடிக்கையாளரின் திருப்திதான் என்
வெற்றி. ஆகவே இதனையே நான்
முதல் சவாலாக பார்க்கிறேன். அழகுக்
கலை துறை என்பது நாளுக்கு நாள்
புதுபிக்கப்படும் கலையாகும். நவீன
காலத்திற்கு ஏற்றாற் போல் அழகுக்
கலைத்துறையும் அப்டேட் ஆகிகொண்டி
ருக்கிறது.அதற்கேற்றாற் போல என்னை
நானும் அப்டேட் அக வைத்துக் கொள்ள
வேண்டியது எனக்கிருக்கும் சவால்
ஒன்றே. அழகுக்கலைத் தொடர் பான
நம் அறிவை மெருகூட்டி நமது அந்த
அறிவின் மூலம் வாடிக்கையாளர்களை
மெருகூட்டவேண்டும். நான் அதனை
சவாலகவே கருதுகிறேன்.மேலும் தற்கா
லங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும்
உயர்தரமான அழகுக்கலை பொருட்
களை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்
படுகிறது. எனக்கு மட்டுமல் இந்த
துறையில் இருப்பவர்களுக்கு நிச்சயம்
இது ஒரு சவாலாகவே இருக்கும்.
அழகுக்கலைத்துறையில் உங்
களுக்கு கிடைத்த வாய்ப்புகளும்
நீங்கள் அடைந்த சாதனைகளையும்
பற்றி ஒரு சில..
வாய்ப்புகள் என்று பார்த்தோமானால்
நம்முடைய சிறந்த சேவையே நமக்கான
வாய்ப்பை பெற்றுத்தருகின்றது. பெற்றுக்
கொள்ளும் பணத்திற்கு ஏற்ற சரியான
தரமான சேவையை நாம் கட்டா
யம் வழங்கவேண்டும். இது நம்
கடமை.
கடமையை சரியாகசெய்வதை போலவே
திறமையையும் சிறப்பாக வெளிக்காட்டு
கிறேன். இதன் மூலம் என்னை தேடி
பல வாய்ப்புகள் வருகின்றன. குறிப்பாக
நான் முதலே கூறியது போல மணப்பெண்
அலங்காரத்திற்காகவே எனக்கு ஓர்டர்ஸ்
நிறைய வருகின்றது. என்னை நம்பி வரும்
வாடிக்கையாளர்களை அழகாக ஒப்பணை
செய்து அவர்களை திருப்திபடுத்துகிறேன். என்
சேவையில் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள்
மீண்டும் ஏதேனும் ஒப்பணைக்காக என்
னிடமே வருகின்றனர். இதுவே எனக்கான
வாய்ப்பொன்றுதான்.அழகுக்கலைத்
துறையில் சாதனைகள் என்று கூறுவதா
னால் அழகுக்கலையை முழுமையாக
கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு ஆசை
எனக்கிருந்தது. நான் அழகுக்கலையை
ஒரு துறையாக தேர்ந்தெடுக்கும் போதே
டிப்ளோமா மற்றும் மாஸ்டர் கற்கைநெறிகளை
பூர்த்தி செய்தேன். இது நான் அடைந்த
சாதனையொன்றாகும். இந்த தொழிலில்
ஏற்ற தாழ்வுகள் வந்து போனாலுமே 16
வருடங்களாக என் தொழிலை வெற்றிகரமாக
நடாத்தி எனக்கென்றவொரு தனியிடத்தை
வகுத்துள்ளேன். நிறைய விருதுகளையும்
வாங்கி இருக்கிறேன். தொடர்ந்தும்
அழகுக்கலைத் துறையிலிருக்கும் புது புது
விடயங்களை கற்று பல சாதனைகளை
செய்யவேண்டுமென்ற எண்ணத்தோடும்
முயற்சியோடும் செயற்பட்டு வருகின்றேன்.
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு
நீங்கள் கூற நினைப்பது.
பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி
போடக்கூடாது. தமக்கானதொரு தொழிலை
செய்து தனக்கென்ற ஒரு அடையாளத்தை
உருவாக்க வேண்டும். பெண்களின்
வாழ்க்கை போரட்டம் நிறைந்ததாகும்.
வாழ்வில் எத்தனை சோகங்களும், தோல்
விகளும் வந்தாலும் கூட அவற்றை எல்லாம்
வெற்றிக்கான வழிகள் என்று கருதி
விடாமுயற்சியோடு போராட வேண்டும்.
அனைத்து பெண்களும் சாதிக்கவேண்டும்!