இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவா...
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது தமிழ்நாட்டை சேர்ந்த மீனவபிரதிநிதிகள் மற்றும் வடபகுதி மீனவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.