இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் எரிவாயு தரையிறக்கம் ஆரம...
இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையில் எரிவாயு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 7 மணி முதல் எரிவாயு விநியோகம் என்றும், வாடிக்கை யாளர்கள் எரிவாயுவைப் பெற முடியும் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முதலாவதாக, மருத்துவமனைகள், தொழிற் சாலைகள் மற்றும் மேல் மாகாணம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு எரிவாயு விநியோகிக் கப்படும்.
இந்தக் கப்பலில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்ளளவு உள்ளது. நாட்டின் தினசரி எரிவாயு தேவை சுமார் 1,100 மெட்ரிக் தொன் ஆகும்.
அதன்படி, இந்த எரிவாயு இருப்பு 03 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.