உங்களைப் பற்றிய அறிமுகம் என் பெயர் ஜெயவானி ஜெகநாதன். யாழ்ப்பாணத்தின் அரியாலையில் வசிக்கிறேன். நான் குயளாழைn டீநயரவல ஊழசநெச அழகுக்கலை நிறுவ...
உங்களைப் பற்றிய அறிமுகம்
என் பெயர் ஜெயவானி ஜெகநாதன். யாழ்ப்பாணத்தின்
அரியாலையில் வசிக்கிறேன். நான் குயளாழைn
டீநயரவல ஊழசநெச அழகுக்கலை நிறுவனத்தை
நடாத்திவருகிறேன். எனது வேலையை நான்
சிறப்பாக செய்ய வேண்டுமென்பதில் எப்போதும்
உறுதியாக இருக்கிறேன். அழகுக்கலைத்துறையை
மிகவும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய
ஆர்வமும்,தன்னம்பிக்கையும் தான் என்னை அழகுக்
கலைத்துறையுலகிற்கு அறிமுகம் செய்தது.
அழகுக்கலைத் துறையில் எப்படி ஆர்வம்
வந்தது?
சிறுவயதிலிருந்தே நாட்டியம், நடனம், நாடகம்,
அழகுக்கலை என அனைத்து துறைகளிலும்
எனக்கு ஆர்வம் அதிகம். எனது அம்மா ஒரு
நடனக்கலைஞர். அவருடைய அந்த துறைதான் நான்
அழகுக்கலையில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டியது.
நான் இந்த துறையைத் தேர்ந்தெடுக்க முழுக்க
முழுக்க என்னை ஊக்குவித்தது என் பெற்றோர்
தான். இதன் மூலம் எனக்குள் இருந்த ஈடுபாடு
அதிகரிக்கவே நானே விரும்பி இந்தத்துறையைத்
தேர்ந்தெடுத்து ஆர்வத்தோடு கற்க ஆரம்பித்தேன்.
1999 ஆம் ஆண்டு அழகுக்கலைத்துறைக் கற்றலை
ஆரம்பித்தேன். ஜோரிஸ் சண்முகநாதன் அவர்களிடம்
அழகுக்கலைத்துறையை கற்றுக்கொண்டேன். இருந்
தாலும் தெரியாதவற்றைத் தேடிப் படிப்பதில் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த எண்ணம்
தான் குயஉயைட மற்றும் மற்ற அழகு ஒப்பணைகளில்
கடினமானவற்றை நான் கற்றுக்கொள்ள உதவியாய்
அமைந்தது.
புதுபுது விடயங்களைத் தேடிக்கற்பதன்
மூலமே ஒரு துறையில் நாம் கொண்ட
அறிவை விருத்திசெய்யலாம். நான்
அதையே பின்பற்றுகிறேன். இன்றும்
நான் அழகுக்கலைத்துறையில் புதுபுது
விடயங்களை தேடிக் கற்றுக்கொண்டு
இத்துறையில் நீங்கள் எதிர்
நோக்கும் சவால்கள் என்ன?
அழகுக் கலைத்துறையென்பது எனக்கு
சவால்கள் நிறைந்த துறைதான். 2014
ஆம் ஆண்டு முதன் முதலில் Fashion
Show
ஒன்றை ஒழுங்கு செய்தேன்.
இதன்போதே நான் பல சவால்களை
எதிர்கொண்டேன். எதிர்ப்புகளும்,
எதிர்மறையான கருத்துக்களையும்
என்னை பின் வாங்கச்செய்தது. இருப்
பினும் இதை எப்படியாவது செய்து
முடிக்கவேண்டுமென்ற எண்ணத்தில்
யாழ்ப்பாணத்தில் Fashion
Show வை
ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி
அழகுக் கலைத்துறையில் உங்க
ளுக்கு கிடைத்த வாய்ப்புகளும்
நீங்கள் அடைந்த சாதனைகளையும்
பற்றி ஒரு சில..
அழகுக்கலைத்துறையில் எந்தவொரு
வாய்ப்பையும் நான் விட்டுவிடுவதில்லை.
எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில்
முழுமையாக என்னை ஈடுபடுத்தி
என்னால் முடிந்த விடயங்களை நான்
செய்து விடுவேன். அப்படி எழுந்த
ஒன்றுதான் நான் புத்தகமெழுத
காரணமாயிருந்தது. என் நண்பர்களின்
உதவியோடும் ஆதரவோடும் நாம்
நடாத்திய Fashion Show இற்கான
புத்தகமொன்றை எழுதி வெளியிட்டோம்.
இதனை தொடர்ந்து பல அழகுக்கலை
நிகழ்வுகள் Fashion Show களையும்
நடாத்தினேன். எனது சமூகத்தில்
Modeling என்றவொரு எண்ணத் தையும்
அறிமுகம் செய்து அனைவரினதும்
சார்பாக பெரும் ஆதரவைப்பெற்றுக்
அழகுக் கலைத்துறையில்
நான் பெற்ற தேர்ச்சியைக் கொண்டு பல
குறுந்திரைப் படங்களுக்கு ஒப்பணை
யாளராக இணைந்து கொண்டேன்.
அத்தோடு அத் திரைப்படங்களின்
கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவ
மைப்பு களையும் மேற்கொண்டிருந்தேன்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற
‘சிகரம் தொட்ட பெண்கள்” எனும்
பெண்களுக்கான கௌரவ விருதுவிழாவில்
நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த
விருது என்னை மேலும் பலப்படுத்தி என்
திறமையை ஊக்குவிப்புச்செய்தது. ஒரு
பெண்ணாக நான் சாதிக்கவேண்டுமென்று
நினைத்து செயற்பட்டதன் விளைவாகவே
சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு
நீங்கள் கூற நினைப்பது.
எம்மாலும் சாதிக்கமுடியுமென்று ஒவ்வொரு
பெண்களும் நினைக்கவேண்டும். அப்படி
நினைத்ததாலேயே தற்போது இந்த இடத்தில்
நான் என்னைப்போன்ற பல பெண்களுக்கு
உதாரணமாய் இருக்கிறேன். ஒவ்வொரு
பெண்களும் சாதிக்க வேண்டும். பெண்ணாக
இருந்தாலும் ஒரு ஆணைப் போல துணிந்து
செயற்படவேண்டும். எந்த காலமாக இருந்
தாலும் ஒவ்வொரு பெண்களாலும் சாதிக்க
முடியும். பெண்களால் முடியாததென்று
எதுவுமில்லை