”இந்த உலகம் கண்டிராத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகின்றோம். அதன் விளைவுகளை இப்போது இலங்கை உணர்கின்றது. நாம் ஒன்றுபட வ...
”இந்த உலகம் கண்டிராத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகின்றோம். அதன் விளைவுகளை இப்போது இலங்கை உணர்கின்றது. நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றாக இணைந்து யுத்தத்தை முடித்தோம். நாங்கள் ஒன்றாக இணைந்து தடுப்பூசி செலுத்தி, கொவிட் – 19க்கு எதிராக போராடினோம். இப்போது நாம் ஒன்றாக இணைந்து இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்த்து போராடுகின்றோம். #WeAreWithGota நாங்கள் கோட்டாவுடன்” என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல டுவிட் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.
இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஸவும், #WeAreWithGota என்ற டெக்கின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவை திரட்டும் வகையிலான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்.
உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
வரிசைகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல.
பொங்கி எழும் வாழ்க்கைச் செலவு இலங்கையில் மட்டுமல்ல.
உலகளாவிய நெருக்கடி இப்போது நம்மை பாதிக்கிறது.
நாங்கள் கோட்டாவுடன் என அவர் டுவிட்டரின் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, #GoHomeGota2022 என்ற டெக்கின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி, மற்றுமொரு பிரசாரம் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.