நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாற...
நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப் வண்டி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், இந்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.