பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் கொலையுடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை வி...
பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் கொலையுடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி அடித்து, துன்புறுத்தப்பட்டு, தீக்கிரையாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பிலான காணொளிகளின் ஊடாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 100ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.