பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இராணுவ மோட்டார் சைக்கிள்கள் அங்கு வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என ச...
பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இராணுவ மோட்டார் சைக்கிள்கள் அங்கு வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தை காணொளி ஊடாக பார்த்தாகவும், இராணுவ மோட்டார் சைக்கிள்களின் ஒரு புறத்தில் இலக்கத்தகடுகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயுதங்களை ஏந்திக்கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவர்கள் வந்தார்களா அல்லது யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
ஆனாலும் சீருடையில் இருக்கும் இராணுவ வீரர்களை தாக்கியமை தவறு எனவும் சரத் பொன்சேகா எம்.பி சுட்டிக்காட்டினார்.