யாழில் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் த...
யாழில் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாட்டு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது விலை அதிகரிப்பு பொருட்களுக்கு தட்டுப்பாடு என தற்போதைய அரசாங்கம் மக்களைப் பல வழிகளிலும் அசௌகரியப்படுத்தி வருகிறது.
நாட்டில் பல பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தாமாக முன்வந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆகிய மக்கள் சக்தியானது நாடு ஊராக 150 தொகுதிகளில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளவுள்ளது.
வலி வடக்கு தெல்லிப்பளை புன்னாலைக்கட்டுவன் இணுவில் பகுதிகளில் இருந்து ஆரம்பமாகும் போராட்டமானது சுன்னாகம் பஸ் நிலையத்தை வந்தடையும்.
ஆகவே குறித்த போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரும் பங்கு கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் வலி வடக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரும் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினருமான பிரபாகரன் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நல்லூர் தொகுதி அமைப்பாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.