வலி தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் வெளி தென்மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இடம்பெற இருந்த ...
வலி தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் வெளி தென்மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இடம்பெற இருந்த நிலையில் சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் மற்றும் சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெகதீசன் ஆகியோர் சபையின் முன்பாக காலை 9 மணியளவில் காவி தரித்த சிலுவையுடன் இன மத பேதமின்றி இரத்தம் படிந்த சிவப்பு பட்டிகளை குறியீடாக அணிந்து நாட்டின் தற்போதைய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இதன்போது பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக பெரல்களில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் படங்களை கட்டி தொங்கவிட்டு கோத்தாபயவின் உருவப்படத்திற்கு சபையின் முன்பாக தீயிட்டு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர் இதன்போது தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உட்பட தவிசாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.