வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நடைமுறையை ரத்து செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிள்க...
வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நடைமுறையை ரத்து செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், கார்கள், வேன்கள், ஜீப் வண்டிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் மாத்திரமே நிரப்பப்படும் என கடந்த 15ம் திகதி சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.