இலங்கையில் தற்போது நிலவும் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண ஐந்து சக்தி வாய்ந்த நாடுகளுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதம...
இலங்கையில் தற்போது நிலவும் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண ஐந்து சக்தி வாய்ந்த நாடுகளுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ரணில் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை இதைவிட மோசமான உணவு நெருக்கடியை சந்திக்கும் என இந்த நாடுகள் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும், இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மேற்கண்ட நாடுகள் ரணிலிடம் தெரிவித்துள்ளன.