யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ய...
யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளிடம் அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். மேலும் அவர், அங்குள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளே வைத்து ஆலையின் கதவுகளுக்கு சீலிடுமாறு புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.
. "சுமார் 1,000 பொதுமக்கள் மற்றும் 500 காயமடைந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அசோவ்ஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்" என்று சமூக ஊடகங்களில் வெரேஷ்சுக் கூறியுள்ளார்.