பேசாலை மற்றும் மன்னார் ஊடாகவே இந்தியாவிற்கு ஆட்களை கடத்துகின்றீர்கள் என்பதே எமது புலனாய்வு அறிக்கை என கடற்படையின் வடபகுதி தளபதி குமார தெரி...
பேசாலை மற்றும் மன்னார் ஊடாகவே இந்தியாவிற்கு ஆட்களை கடத்துகின்றீர்கள் என்பதே எமது புலனாய்வு அறிக்கை என கடற்படையின் வடபகுதி தளபதி குமார தெரிவிப்பு.
பேசாலையில் இன்று மாலை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
பேசாலை மீனவர் சங்க பிரதிநிதிகள், பங்குத் தந்தை ஞானப்பிரகாசம், கிராம மக்கள், வர்த்தக சங்கம், நீரியல்வளத் திணைக்கள அதிகாரி மீனவர்கள் என கலந்துகொண்ட இக் கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஆட்களை ஏற்றிச் செல்வது தொடர்பான தகவல் தெரிந்தால் கடற்படையினருக்கு தெரிவிக்குமாறும் கோரப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த கடற்றொழில் சங்க பிரதிநிதி 70 ஆயிரம் மக்கள் எனில் 15 ஆயிரம் படையினர் உள்ளீர்கள் இந்த நிலையில் எல்லோர் மீதிம் குற்றம் சுமத்தக் கூடாது. அதேநேரம் எரிபொருள் இல்லை, அரசி, மா, சீனி, பால் மா இல்லை இவை இருந்தால் எமது மக்கள் கடத்தலிற்கு செல்வதனை தடுக்க முடியும் என்றனர்.