சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திஸர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – முகத்துவாரம் பொலிஸாரினால் கைது செய...
சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திஸர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – முகத்துவாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனை குற்ற கோவையின் 120ஆவது சரத்தின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பகுதியில் வைத்தே, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை கொழும்பு புதுகடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த கைது நடவடிக்கையானது, சட்டவிரோதமானதா என்பது குறித்து ஆராய்வதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது