யாழ் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய...
யாழ் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொக்குவில் பகுதியில் உள்ள புதர் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு இரகசிய புலனாய்வுத் தகவல் கிடைக்கப் பெற்றது.
பொலிசார் வருவதை உணர்ந்த சந்தேகநபர்கள் கஞ்சா பொதிகள் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்