ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கும் காரை தற்போது முன்னாள் அமைச்சர் சரத்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கும் காரை தற்போது முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு பதிலளித்த சரத் வீரசேகர, சஹாரானின் வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை எனவும், அது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.