அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 18 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் உய...
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 18 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்ஸாஸ் பிராந்தியத்தின் யுவால்டே நகரிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி பிரயோகம் நடத்திய நபர், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரி, பாடசாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கு முன்னர் தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்திய நபர், குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 18 வயதான மாணவராக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஆசிரியர் ஒருவரும் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகமானது, பயங்கரவாத செயலா என்பது தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.