இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முடக்கப்படும்.. அன்ன ராசா தெரிவிப்பு..

இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முடக்கப்படும்.. அன்ன ராசா தெரிவிப்பு..

இந்தியா தமிழ்நாடு மீனவர்களின் எல்லை தாண்டி மீன் பிடி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வடக்கு மாகாணத்தைப் பிரித்து படத்தின் தமிழ் பாராளுமன்...

இந்தியா தமிழ்நாடு மீனவர்களின் எல்லை தாண்டி மீன் பிடி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வடக்கு மாகாணத்தைப் பிரித்து படத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்தப்படும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை
தமிழ்நாடு இராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நியாயமற்றது .


 தங்கச்சிமடம் பகுதியில் சில மீனவர்கள் இலங்கையில் உள்ள தமது படகுகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்துவதாக அறிகிறோம்.

அவர்களின் போராட்டத்தை வடமாகாண மீனவர்கள் ஆகிய நாம் நியாயமற்ற போராட்டமாகவே பார்க்கிறோம்.


ஏனெனில் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு படகுகள் சட்டத்தின் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகளை நீதிமன்ற உத்தரவின் பெயரில் படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அவற்றை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் செய்வது இலங்கை இறையாண்மையை வருவதாகவும் இந்தியாவிலுள்ள வடபகுதி மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துக் கொண்டு தங்களுடைய படகுகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருவது நியாயமற்றது.

 வட மாகாண மீனவர்கள் இந்திய இழுவைப் படகு தொழில் முறையினால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தொடர்ச்சியாக பல கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இரண்டாயிரம் படகுகளால் வடபகுதியில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சம் பேர்
பாதிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .

நாம் இந்திய நாட்டுக்கோ தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எமது நியாயமான கோரிக்கையை பலமுறை இந்திய அரசாங்கத்திடமும் தமிழக மீனவர்களிடமும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

தமிழக மக்களின் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாட்டு முதல்வருக்கும் மக்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிவாரண பொருட்கள் அனுப்பியது வடபகுதி மீனவர்களுக்கு இலங்கை முழுவதற்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிவாரண பொருட்களை வைத்துக் கொண்டு நமது பிரச்சினையை தீராத பிரச்சினையாக மாற்றக்கூடாது.

நாம் இன்று பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளோம் என்பது உண்மைதான் அதற்கு இந்தியா உதவுவதை விட்டு நம்
 மகிழ்ச்சி அடைவதோடு அதற்கு பரிகாரமாக மீனவர்கள் ஆகிய நாம் ஒரு சந்தர்ப்பத்தில்  தமிழக மக்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.

மேலும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பில்  வடமாகாண ஆளுநர் ,அரச அதிபர் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஆகியோருக்கு பலமுறை  தெரிவித்தும் பயனில்லை.

வடக்கு மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது பிரச்சினை தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்கள்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் சந்தித்தபோது நமது மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமாக இதனையும் பேசவில்லை.

எனவே எமது மீனவர் பிரச்சினை தொடர்பில் இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தாது எமது வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் கட்சி அலுவலகங்களை முடக்கி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் .

எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதியுடன் மீன்பிடித் தடை காலம் தமிழ்நாட்டில் நீக்கப்படும் நிலையில் எல்லை தாண்டி வரும் மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் உதவுவதற்கு முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3316,lanka,8609,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முடக்கப்படும்.. அன்ன ராசா தெரிவிப்பு..
இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முடக்கப்படும்.. அன்ன ராசா தெரிவிப்பு..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj519dij4hK4vyzRPWoj4uMhFj--FVJHBQUzORSy9K59keOcIR9njttJZlJ_OiBLwwOwDviNomCyAl5RumvR5YQ3bxY8Q8UkON7WR52AM7OgmP-AIJ2S8rNpcP4IMq1_3femal-1DKbD8Jl59wVThdINT6m_AF61NSlraZdn91arH17KEm1iMBbNiV7/w640-h300/IMG_20220520_130048.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj519dij4hK4vyzRPWoj4uMhFj--FVJHBQUzORSy9K59keOcIR9njttJZlJ_OiBLwwOwDviNomCyAl5RumvR5YQ3bxY8Q8UkON7WR52AM7OgmP-AIJ2S8rNpcP4IMq1_3femal-1DKbD8Jl59wVThdINT6m_AF61NSlraZdn91arH17KEm1iMBbNiV7/s72-w640-c-h300/IMG_20220520_130048.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2022/05/blog-post_121.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/05/blog-post_121.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content