லங்கா சதொசவில் மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அனைத்து பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கும் வழங்க அரசு தீர்மானித...
லங்கா சதொசவில் மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அனைத்து பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறப்பிட்டுள்ளார்.
ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி 145 ரூபாய்க்கும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாய்க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.