தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் நாட்டுக்கு எதிரானவர்களும் காலிமுகத்திடலில் இருக்கின்றனர். அத்தகையோரை அங்கிருந்து அகற்றுமாறு உண்மையான ஆர்ப்பாட்...
தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் நாட்டுக்கு எதிரானவர்களும் காலிமுகத்திடலில் இருக்கின்றனர். அத்தகையோரை அங்கிருந்து அகற்றுமாறு உண்மையான ஆர்ப்பாட்டகாரர்களிடம் கோருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,
காலிமுகத்திடலுக்கு பல்வேறு தரப்பினர் வருகின்றனர். அரசை விமர்சிக்க உரிமையுள்ளது.
ஆனால் இதற்குள் வேறு நபர் நுழைந்து, அதனை வேறுபக்கம் திருப்ப முயல்கின்றனர்.
பௌத்த மதத்திற்கும் தேசிய கொடிக்கும் அவமதிப்பு செய்பவர்கள் அங்கு இருந்தால், தமிழீழத்திற்கு வழிஅமைப்பதாக இருந்தால், வேறு மதத்தை மேம்படுத்துவதாக இருந்தால், புத்தர் சிலை உடைக்க ஒத்துழைப்பதாக இருந்தால் அத்தகையோரை ஆர்ப்பாட்ட பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என உண்மையாக ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களிடம் கோருகிறோம்.
முழு சிங்கள சமூகத்தையும் அவமதித்த, படையினரை ஜெனீவாவில் காட்டிக் கொடுத்த நபரையும் காலி முகத்திடலில் கண்டேன் எனவும் கூறினார்.